சவுதி அரேபியாவில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் ஹஜ் புனித யாத்திரைக்கு சென்றுள்ள மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை 922 ஹஜ் புனித பயணிகள் வெப்ப அலை காரணமாக உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 80 பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் 600 பேர் இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது. மேலும், குர்திஸ்தான், செனகல், ஈரான், இந்தோனேசியா, ஜோர்டான், துனிசியா ஆகிய நாடுகளும் தங்கள் நாட்டவர்கள் ஹஜ் யாத்திரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளன.
இந்தியாவிலிருந்து 1.75 லட்சம் பேர் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டு உள்ளனர். அவர்களின் 80 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பயணத்தில் ஈடுபட்டுள்ள பலரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது. தற்போதைய நிலையில், உயிரிழந்தவர்களில், ஜம்மு காஷ்மீரில் இருந்து ஹஜ் யாத்திரை மேற்கொண்ட 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.