டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு நிறுவனமான ஏர் இந்தியா, அதன் விமானங்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாணவர்களுக்கு எகானமி வகுப்பில் தற்போதுள்ள அடிப்படைக் கட்டணத்தை பாதியாக தள்ளுபடி செய்துள்ளதாக அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தள்ளுபடி செப்டம்பர் 29 முதல் அமலுக்கு வரும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியாவை டாடா குழுமம் இந்த ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி அரசிடம் இருந்து தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஏர் இந்தியா, செப்டம்பர் 29, 2022 அன்றிலி௫ந்து மூத்த குடிமக்கள் மற்றும் மாணவர்களுக்கு எகானமி வகுப்பில் வழங்கப்படும் டிக்கெட்டுகளுக்கு அடிப்படைக் கட்டணத்தில் 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. முன்னதாக ஏர் இந்தியா நிறுவனம், இந்த இரண்டு வகை பயணிகளுக்கு தனது விமானத்தின் எகானமி வகுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்பதிவுகளுக்கு 50 சதவீத தள்ளுபடியை வழங்கியதாக இணையதளத்தில் தெரிவித்தது. இந்நிலையில் செப்டம்பர் 28 தேதியில் வெளியிட்ட சுற்றறிக்கையில், "சலுகைக் கட்டணங்களை 29 செப்டம்பர் 2022 முதல் திருத்தியுள்ளதாக அறிவித்தது. அதன்படி மூத்த குடிமக்களுக்கான திருத்தப்பட்ட சலுகையானது அடிப்படை கட்டணத்தில் 25 சதவீதம் என நிறுவனம் ௯றியது. மேலும் மற்ற தனியார் விமான நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, ஏர் இந்தியா மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இருவருக்கும் அடிப்படைக் கட்டணங்களின் தள்ளுபடியானது இரு மடங்காக இருக்கும் என்று கூறியது.
நிறுவனமானது ஒட்டுமொத்த சந்தை நிலவரம் மற்றும் துறையின் போக்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கட்டணங்களை நிர்ணயித்துள்ளதாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறினார்.