இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஜனவரி 19 முதல் போர் நிறுத்தம் அமலாகியதிலிருந்து இது 5வது முறையாக பணய கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர். தெய்ர்-அல்-பலா நகரில் விடுதலை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன், ரெட் கிராஸ் அமைப்பின் மீட்பு வாகனங்கள் அங்கு வந்தன. இதை காண பொதுமக்களும் கூடினர். அதே நேரத்தில், முகமூடி அணிந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் துப்பாக்கிகளுடன் அங்கு இருந்தனர். பின்னர், ஒரு வெள்ளை வாகனத்தில் இருந்து 3 இஸ்ரேலிய கைதிகளை கொண்டு வந்து, தற்காலிக […]

இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

ஜனவரி 19 முதல் போர் நிறுத்தம் அமலாகியதிலிருந்து இது 5வது முறையாக பணய கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர். தெய்ர்-அல்-பலா நகரில் விடுதலை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன், ரெட் கிராஸ் அமைப்பின் மீட்பு வாகனங்கள் அங்கு வந்தன. இதை காண பொதுமக்களும் கூடினர்.

அதே நேரத்தில், முகமூடி அணிந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் துப்பாக்கிகளுடன் அங்கு இருந்தனர். பின்னர், ஒரு வெள்ளை வாகனத்தில் இருந்து 3 இஸ்ரேலிய கைதிகளை கொண்டு வந்து, தற்காலிக மேடையில் நிற்க வைத்தனர். மேலும், கைதிகளை பொதுவெளியில் பேசுமாறு கேட்டுக் கொண்டனர். இது முதல்முறையாக நடந்தது. பின்னர், அவர்கள் ரெட் கிராஸ் தன்னார்வலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியர்கள், 2023 அக்டோபர் 7 தாக்குதலின்போது ஹமாஸ் கைதியாக்கியவர்களாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu