பாலஸ்தீன ஆவணப்பட இயக்குநர் ஹம்தான் பல்லால் இஸ்ரேல் ராணுவத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
பாலஸ்தீன ஆவணப்படம் "நோ அதர் லேண்ட்" க்காக ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் ஹம்தான் பல்லால், இஸ்ரேல் ராணுவத்தால் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் கைது செய்யப்பட்டார். இவர் இஸ்ரேலிய குடியேறிகள் குழுவின் தாக்குதலில் சிக்கி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு உள்ள ஆம்புலன்சை இஸ்ரேல் ராணுவம் தாக்கி, ஹம்தானை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது.
இஸ்ரேல் ராணுவம் இந்த சம்பவம் குறித்து வெளியிட்ட அறிக்கையில், "பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்கள் இடையே கற்களை வீசும் வன்முறை நடந்தது" என்றும், "பயங்கரவாதிகள் கற்களை எறிந்ததால் சண்டை ஆரம்பிக்கப்பட்டது" எனவும் தெரிவித்திருந்தது.இந்நிலையில் ஹம்தான் பல்லால் மற்றும் மேலும் இரண்டு பேர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.