வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா மீது மேலும் ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக முன்னாள் பிரதமர் ஹசீனா மீது கொலை, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இந்நிலையில் கடந்த நான்காம் தேதி சில்ஹெட் சிட்டி பகுதியில் நடைபெற்ற ஆர்பாட்டங்களின் போது துப்பாக்கி சூடு நடைபெற்றது, அந்த வன்முறை சம்பவம் தொடர்பாக ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரி ஷேக் ரெகானா உட்பட 86 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.