அடுத்த ஓராண்டுக்குள், கடன் வழங்கல் மூலம், 6 பில்லியன் டாலர்கள் அல்லது 500 பில்லியன் ரூபாய்கள் மதிப்பில் நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளதாக ஹெச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது. சனிக்கிழமை நடைபெற உள்ள நிர்வாகக்குழு சந்திப்பில், இது தொடர்பான திட்டங்கள் கலந்துரையாடப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையும் அப்போது வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மையாக, கடன் பத்திரங்கள் வெளியீடு மூலம் இந்த நிதி திரட்டப்பட உள்ளது. சாதாரண கடன் வழங்கல் முறை, வகுப்பு 1 மற்றும் 2 கடன் பத்திரங்கள் மற்றும் நீண்ட கால கடன் பத்திரங்கள் ஆகியவை மூலம் நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஹவுசிங் டெவலப்மெண்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவை வரும் ஜூன் மாதம் இணைக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக, நிதி திரட்டல் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, கடந்த டிசம்பர் மாதத்தில், கடன் பத்திரங்கள் மூலம், 50 பில்லியன் ரூபாய் மதிப்பில் ஹெச்டிஎஃப்சி வங்கி நிதி திரட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.