வெப்ப அலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை

வெப்ப அலை அதிகரித்ததை அடுத்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பீகாரின் கயாவில் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மருத்துவமனையில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதிகரித்துள்ள வெப்பநிலையால் பாட்னாவில் ஜுன் 24-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. வரகூடிய நாட்களில் டெல்லி, பஞ்சாப் மற்றும் அரியானாவில் வெப்பநிலை 40 முதல் 45 டிகிரி வரை உயர கூடும் என […]

வெப்ப அலை அதிகரித்ததை அடுத்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பீகாரின் கயாவில் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மருத்துவமனையில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதிகரித்துள்ள வெப்பநிலையால் பாட்னாவில் ஜுன் 24-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. வரகூடிய நாட்களில் டெல்லி, பஞ்சாப் மற்றும் அரியானாவில் வெப்பநிலை 40 முதல் 45 டிகிரி வரை உயர கூடும் என இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி நரேஷ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளர்.

இந்நிலையில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் ஜெனரல் டாக்டர் ராஜீவ் பால், இந்திய வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். வெப்ப அலை அதிகரிப்பை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கபடுவதாக கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu