இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் 2 பேர் உயிரிழந்தனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் சோழன், ஹமிர்பூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று நிகழ்த்த மேகவெடிப்பின் காரணமாக அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் விளை நிலங்கள், வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. காங்க்ரா தாலுகாவில் உள்ள தண்ட அரசு கல்லூரி மருத்துவமனைகுள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதிப்பட்டனர். கனமழை காரணமாக மாண்டி தேசிய நெடுஞ்சாலை மாண்டி ஜோதிந்தார் நகர் நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழைக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாக இமாச்சலப் பிரதேசம் அரசு அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது.