இத்தாலியில் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இத்தாலி நாட்டின் வடக்கு பகுதியான எமிலியா ரோமக்னாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மின்கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்ததால் நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும் அங்கு ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இதையடுத்து மீட்பு படையினர் ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். இந்த கனமழை காரணமாக வீடுகள் சேதமடைந்ததால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.