தமிழ்நாட்டில் கனமழை காரணமாக திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மாற்றம் உண்டாகி, அதனால், கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிதமான மழை மற்றும் மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவாரூர் பகுதியில், நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மாவட்ட கலெக்டர் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.