தெலுங்கானாவில் ரீமால் புயலால் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்தது.
வங்கக்கடலில் உருவான ரீமால் புயலால் தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் ஹைதராபாத், நாகூர், கர்னூல், மேடக், கங்கா ரெட்டி உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. மேலும் ஆங்காங்கே சூறாவளி காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் சாலைகளில் விழுந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் பலத்த மழையின் காரணமாக தெலுங்கானாவில் பல்வேறு மாவட்டங்களில் ஒரே நாளில் 15 பேர் பலியாகியுள்ளனர்