ஹைதி நாட்டில் ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 42 பேர் பலியாகி உள்ளனர்.
ஹைதி நாட்டின் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் நாட்டின் பல்வேறு நகரங்களில் திடீரென ஏற்பட்டு உள்ள தொடர் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிக்கி 42 பேர் வரை பலியாகி உள்ளனர். 11 பேரை காணவில்லை. மேலும் கனமழையால் 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3,400 பேர் தங்களது இருப்பிடங்களை விட்டு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். தேசிய அவசரகால இயக்க மைய அதிகாரிகளை உடனடியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பிரதமர் ஏரியல் ஹென்றி உத்தரவிட்டு உள்ளார்.