கடும் பனிப்பொழிவு மற்றும் தொடர் மழை காரணமாக ஜம்மு - காஷ்மீரில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் குளிர்காலம் துவங்கிவிட்டதை அடுத்து கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு முழுதும் கடும் பனிப்பொழிவு நிலவியதால், ஸ்ரீநகர் - லே நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து முடங்கியது.
வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம், மத்திய காஷ்மீரின் புட்காம், பாராமுல்லா உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு பதிவானது. பெரும்பாலான பகுதிகளில் 15 செ.மீ., முதல் 30 செ.மீ., வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. இதனால் ஜம்மு - காஷ்மீர் முழுவதும் போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மட்டும் செயல்பாட்டில் உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.