ட்விட்டர் ஒரு நிறுவனமாக மாறியதில் தனக்கு மிகப்பெரிய வருத்தம் - ஜாக் டோர்சி

  ட்விட்டரின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாகியுமான ஜாக் டோர்சி சமூக ஊடக தளமான ட்விட்டர் ஒரு நிறுவனமாக மாறியது தனக்கு வருத்தம் அளிப்பதாக ட்வீட் செய்துள்ளார். பில்லியனர் எலோன் மஸ்கின் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் நிறைவடைந்தால் டோர்சி 978 மில்லியன் டாலர்கள் பெறுவார். இந்நிலையில் ட்விட்டரானது, ட்விட்டரை வாங்குவதிலி௫ந்து விலகிச் செல்ல முயற்சித்ததற்காக மஸ்க் மீது வழக்குத் தொடர்ந்தது. ஹேக்கர்கள் மற்றும் ஸ்பேம் கணக்குகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஃபெடரல் கட்டுப்பாட்டாளர்களை ட்விட்டர் தவறாக […]

 

ட்விட்டரின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாகியுமான ஜாக் டோர்சி சமூக ஊடக தளமான ட்விட்டர் ஒரு நிறுவனமாக மாறியது தனக்கு வருத்தம் அளிப்பதாக ட்வீட் செய்துள்ளார்.

பில்லியனர் எலோன் மஸ்கின் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் நிறைவடைந்தால் டோர்சி 978 மில்லியன் டாலர்கள் பெறுவார். இந்நிலையில் ட்விட்டரானது, ட்விட்டரை வாங்குவதிலி௫ந்து விலகிச் செல்ல முயற்சித்ததற்காக மஸ்க் மீது வழக்குத் தொடர்ந்தது. ஹேக்கர்கள் மற்றும் ஸ்பேம் கணக்குகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஃபெடரல் கட்டுப்பாட்டாளர்களை ட்விட்டர் தவறாக வழிநடத்துவதாக எழுந்த புகார் காரணமாக ட்விட்டர் சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. ஆகவே ட்விட்டர் சுயமாக செயல்படும் "ஒழுங்குமுறை விதிகளோடு" இருக்க வேண்டும் என்றும், ட்விட்டர் ஒரு அரசு அல்லது வேறு நிறுவனத்திற்குச் சொந்தமானதாக இருக்கக்கூடாது என்றும் தான் வி௫ம்புவதாக டோர்சி கூறினார். அதாவது ட்விட்டர் ஒரு விதிமுறையோடு இருந்தால் மின்னஞ்சலைப் போலவே செயல்படும். மேலும் அதனால் வெவ்வேறு மின்னஞ்சல் வழங்குநர்களைப் பயன்படுத்தும் நபர்கள் அவர்களுக்குள் ஒருவருக்கொருவரைத் தொடர்பு கொள்ள முடியும் என்று ௯றினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu