கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்து வரும் கனமழையினால் திருவனந்தபுரத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கேரளாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவனந்தபுரத்தில் அதிகமாக மழை பெய்து வருவதால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கனமழை காரணமாக இன்று திருவனந்தபுரத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.