அரசு தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஹாங்காங்கில் அரசு கணினிகளில் கூகுள் டிரைவ், வாட்ஸ்அப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் மட்டுமல்லாமல், அமெரிக்கா, சீனா போன்ற பல நாடுகளும் அரசு கணினிகளில் குறிப்பிட்ட தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளன.
வாட்ஸ்அப், கூகுள் டிரைவ், வீ-சாட் போன்ற தனியார் தளங்கள், சில சமயங்களில் பாதுகாப்பு குறைபாடுகளை கொண்டிருக்கலாம். இதனால், அரசு தரவுகள் கசிவு அடையும் அபாயம் அதிகரிக்கிறது. சமீபத்தில் லட்சக்கணக்கான ஹாங்காங் மக்களின் தனிப்பட்ட தரவுகள் கசிந்திருந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதையடுத்து அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.