வடக்கு செர்பியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
வடக்கு செர்பியாவின் நோவி சாட் நகரில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்த பிறகு, மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்த போது, அனைவரும் இறந்துவிட்டனர் என்று தகவல் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், மின்சார ஸ்கூட்டரே விபத்துக்கான காரணமாகக் கூறப்படுகிறது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.