இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தும் நிலையில், டெல் அவிவ் விமான நிலையம் பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணமாக நிறுத்தப்பட்ட ஜெர்மனியின் விமான சேவை, மீண்டும் 23ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியீடு.
காசாவுக்கு ஆதரவாக ஹவுதி மற்றும் ஹிஸ்புல்லா குழுக்கள் தொடர் தாக்குதல்களில் ஈடுபட, இஸ்ரேல் ஏமன் மற்றும் லெபனானை நோக்கியும் போரை விரிவாக்கியுள்ளது. சமீபத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில், தீ விபத்து ஏற்பட்டு பலர் காயமடைந்தனர். இதையடுத்து ஜெர்மனி-இஸ்ரேல் இடையிலான விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது, பாதுகாப்பு நிலைமைகள் மதிப்பீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜெர்மனியின் லுப்தான்சா நிறுவனம் ஜூன் 23 முதல் மீண்டும் டெல் அவிவ் விமான சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.