கடந்த 1990 ஆம் ஆண்டு, விண்வெளி ஆய்வுகளுக்காக, ஹப்பிள் தொலைநோக்கி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த தொலைநோக்கி வெற்றிகரமாக 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை, நாசா கொண்டாடியுள்ளது. அந்த வகையில், ஹப்பிள் தொலைநோக்கி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
ஹப்பிள் தொலைநோக்கி, பூமியிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் தொலைநோக்கி ஆகும். 97 நிமிடத்திற்கு ஒருமுறை ஹப்பிள் தொலைநோக்கி பூமியை சுற்றி வருகிறது. 0.05 வினாடி டிகிரி விலகி உள்ள பொருட்களைக் கூட பிரித்து இனம் காணும் திறன் கொண்ட இந்த தொலைநோக்கியில், அகச்சிவப்பு கதிர், புற ஊதாக்கதிர், காணுறு ஒளி ஆகிய மூன்று அலை நீளங்களில் நிறமாலைமானி மற்றும் காட்சி செய்யும் திறன் ஆகியவை உள்ளன.
நாசா, ஹப்பிள் தொலைநோக்கி எடுத்த NGC1333 என்ற விண்வெளி பகுதியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. புகைப்படத்தில் காணப்படும் பெகாஸஸ் விண்மீன் தொகுப்பில் உள்ள நெபுலா, பூமியிலிருந்து 960 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வரும் 2030ம் ஆண்டு வரை ஹப்பிள் தொலைநோக்கி செயல்பாட்டில் இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.