சூரியனின் வட துருவப் பகுதியில், திடீரென ஒரு பாகம் உடைந்து, அந்த இடத்தில் நெருப்பு சூறாவளி ஒன்று ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, பூமிக்கு எந்த வகையில் ஆபத்து ஏற்படும் என்பதை குறித்து ஆராய்ச்சி செய்ய தொடங்கியுள்ளனர். பொதுவாக, சூரியனில் ஏற்படும் சூறாவளி காரணமாக தொலைத்தொடர்பு இணைப்புகள் பாதிப்படையும் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரியனிலிருந்து உடைந்த பாகம் அதன் வட துருவப் பகுதியில் சூறாவளியை போல சுற்றி வரும் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பதிவு செய்த இந்த வீடியோ காட்சியை, விண்வெளி ஆராய்ச்சியாளர் தமிதா ஸ்கோவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், "விஞ்ஞானிகள் மத்தியில் இந்த போலார் வொர்க்ஸ் பற்றிய கலக்கம் ஏற்பட்டுள்ளது. அனைத்து விஞ்ஞானிகளும் இது குறித்து பேசுவதும் ஆராய்ச்சி செய்வதுமாக உள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார்.