மனதில் நினைத்தால் கணினி மவுசை இயக்கும் திறன் சாத்தியமாகி உள்ளது. எலான் மஸ்கின் நியூரோலிங் நிறுவனம் மூளையில் சிப் பொருத்தி ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. அந்த வகையில், சிப் பொருத்தப்பட்ட நபர் தனது எண்ணங்களால் கணினி மவுசை இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நரம்பியல் சார்ந்த பாதிப்புகளால் தங்கள் செயல்பாடுகளை இழந்த மக்களுக்கு, மனதில் நினைப்பதை செயல்படுத்தும் திறன் கொண்டு வரும் நோக்கில், நியூரோலிங் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், முதல் முறையாக மனிதர் ஒருவரின் மூளையில் பொருத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தற்போது, அந்த நபரின் உடல் நிலை பூரண குணமடைந்து விட்டதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். மேலும், அவரால் மனதில் நினைத்தபடி கணினி மவுசை இயக்க முடிவதாக கூறியுள்ளார். இதன் மூலம், பக்கவாதம் போன்ற பாதிப்புகளால் அவதியுறும் மக்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது.