நானும் இனவெறியை எதிர்கொண்டுள்ளேன் - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

December 3, 2022

கடந்த காலங்களில் இனவெறியை எதிர்கொண்டுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கூறினார். இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் கடந்த வாரம் நடந்த விருந்து நிகழ்ச்சியில் லண்டனை சேர்ந்த தொண்டு நிறுவனமான சிஸ்டா ஸ்பேசின் நிறுவனர் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் மறைந்த ராணி 2-ம் எலிசபெத்தின் உதவியாளரான லேடி சூசன் ஹஸ்சி இனவெறியை தூண்டும் வகையில் கேள்விகைளை கேட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கிடம் இது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இந்திய […]

கடந்த காலங்களில் இனவெறியை எதிர்கொண்டுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.

இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் கடந்த வாரம் நடந்த விருந்து நிகழ்ச்சியில் லண்டனை சேர்ந்த தொண்டு நிறுவனமான சிஸ்டா ஸ்பேசின் நிறுவனர் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் மறைந்த ராணி 2-ம் எலிசபெத்தின் உதவியாளரான லேடி சூசன் ஹஸ்சி இனவெறியை தூண்டும் வகையில் கேள்விகைளை கேட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கிடம் இது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இந்திய வம்சாளியை சேர்ந்த ரிஷி சுனக் அதற்கு பதிலளிக்கையில், "கடந்த காலங்களில் நானும் இனவெறியை எதிர்கொண்டுள்ளேன். நான் சிறுவனாக இருந்தபோதும், இளைஞனாக இருந்தபோதும் அதை அனுபவித்துள்ளேன். ஆனால் இப்போதும் அது நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் இனவெறியை கையாள்வதில் நம்முடைய நாடு நம்பமுடியாத முன்னேற்றம் அடைந்துள்ளது. இருப்பினும் நாம் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் உள்ளன. " என கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu