தெற்கு காசாவில் ஹமாஸ் அமைப்பின் பாதுகாப்பு பிரிவின் தலைவராக இருந்த ஹஸ்ஸம் ஷாவான், நேற்றிரவு ஒரு ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
கான் யூனிஸ் பகுதியில் மனிதாபிமான மண்டலத்தில் உள்ளபோது இந்த தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. காசாவில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற பாலஸ்தீனியர்கள் இந்த பகுதியில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், இன்று மாலை தெற்கு காசா முனை பகுதியிலிருந்து இஸ்ரேல் சமூகத்தினருக்கான ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல் ராணுவம் இந்த தாக்குதலை இடைமறித்து முறியடித்துள்ளதாக தெரிவித்தாலும், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.