தைவானில் இன்று காலை முதல் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தைவானில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இது எட்டாவது முறையாகும். இந்த தேர்தலில் வேட்பாளர்கள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. டிபிபி கட்சியின் லாரி சிங், கே எம் டி கட்சியின் ஹூ யு, டி வி கட்சியின் கோ வென் ஜே ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இன்று காலை 8 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தனது சொந்த ஊரான டைனானில் வாக்களித்தார்.
இந்த தேர்தலில் உள்நாட்டு பிரச்சினைகளை கூறி அனைத்து கட்சிகளும் பிரச்சாரம் செய்தன. சீனாவின் அச்சுறுத்தல் தைவானின் ஸ்திரமின்மை மற்றும் எதிர்கால கட்டுப்பாடு போன்றவற்றை முடிவு செய்யும் தேர்தலாக இது கருதப்படுகிறது.