கேமேன் தீவில் இன்று மாலை 4.53 மணியளவில் 7.5 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இதை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக கவலை எழுந்துள்ளது. பொதுவாக, அதிக ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள் பூமியின் மேற்பரப்பை தாக்கும் முன் ஆற்றல் குறைந்து விடும். ஆனால், மேற்பரப்பு பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்கள் அதிக ஆற்றலுடன் தாக்கி கட்டிடங்கள் மற்றும் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. தற்போதைய நிலைமை கவலைக்கிடம் என்பதால், மக்கள் அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.