இலங்கை மக்களுக்கு உதவிட அனுமதி கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்!!!

April 29, 2022

29 April 2022, பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும், இலங்கை மக்களுக்கு உதவிட அனுமதி வழங்க முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை கூறுகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

29 April 2022, பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும், இலங்கை மக்களுக்கு உதவிட அனுமதி வழங்க முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை கூறுகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தற்போதுக நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிடும் பொருட்டு, தமிழக அரசு அவர்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, பால் பொருட்கள் முதலிய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கக்கூடிய மருந்துகள் ஆகியவற்றை அனுப்பி வைக்கத் தயாராக உள்ளது என்றும்; இதற்கு மத்திய அரசு தேவையான அனுமதி வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசிற்கு ஏற்கெனவே மாநில அரசு கடிதம் எழுதியிருக்கிறது. எனினும், இதுகுறித்து மத்திய அரசிடமிருந்து எந்தவிதமான தெளிவான பதிலும் இதுவரை பெறப்படாத நிலை உள்ளது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கக்கூடிய மக்களுக்கு உதவக்கூடிய வகையில், உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை உடனடியாக அனுப்பி வைக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து, உரிய அனுமதிகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது“ என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu