மத்திய அரசு,குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா-2025" எனும் புதிய மசோதாவை உருவாக்கியுள்ளது.
மத்திய அரசு, இந்தியாவில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினரை கட்டுப்படுத்த "குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா-2025" எனும் புதிய மசோதாவை உருவாக்கியுள்ளது. இது நான்கு பழைய சட்டங்களை ரத்து செய்யும் வகையில் அமையும்.
இந்த மசோதா சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்காக கடுமையான தண்டனைகளை விதிக்கிறது. போலி பயண ஆவணங்களைப் பயன்படுத்துவோருக்கு 2-7 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1-10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். சட்டவிரோத நுழைவுக்கு 5 ஆண்டுகள் சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் கிடைக்கும்.
வெளிநாட்டினர் தகவல்களை ஓட்டல்கள், கல்வி நிறுவனங்கள், விமான, கப்பல் நிறுவனங்கள் கட்டாயமாக அறிவிக்க வேண்டும். இந்த மசோதா மத்திய அரசுக்கு வெளிநாட்டினர் கண்காணிப்பில் கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.