சென்னை மாநகராட்சிக்கான 2024-2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம் பெற்றுள்ள பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:
மாநகராட்சி பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல ரூபாய் 45 லட்சம் ஒதுக்கீடு
எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தலா இரண்டு சீருடை வழங்க ரூபாய் 8.50 கோடி ஒதுக்கீடு
255 பள்ளிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ரூபாய் 7.46 கோடி ஒதுக்கீடு
சென்னை பள்ளி மாணவர்களுக்கு காலணிகள் வழங்கப்பட ரூபாய் 3.59 கோடி ஒதுக்கீடு
பள்ளி மாணவர்களின் அடையாள அட்டை வழங்குவதற்கு ரூபாய் 61 லட்சம் ஒதுக்கீடு
சென்னை ராயப்பேட்டையில் மாநகராட்சியின் கீழ் செயல்படும் தொழிற்பயிற்சி நிலையத்தை மேம்படுத்த ரூபாய் 3 கோடி ஒதுக்கீடு
419 சென்னை பள்ளிகளில் உடனடி பழுது பார்க்கும் வகையில் ரூபாய் 1.32 கோடி நிதி ஒதுக்கீடு
திறமை மிக்க மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு STEM பயிற்சி வழங்க ரூபாய் ஒரு கோடி ஒதுக்கீடு
338 பள்ளிகளுக்கு ஐந்து பச்சை வண்ண பலகைகளை வழங்க ரூபாய் 92.95 லட்சம் ஒதுக்கீடு
சைதாப்பேட்டை மருத்துவமனையில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த ரூபாய் 7 கோடி ஒதுக்கீடு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கு பிரத்தியேக உடற்பயிற்சி கூடம் அமைக்க ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னையில் எட்டு நீர்நிலைகளை 10 கோடி செலவில் புனரமைக்க திட்டம்
வார்டு உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூபாய் 45 லட்சமாக வழங்க ஒரு கோடி நிதி ஒதுக்கீடு.














