பாகிஸ்தானில் 33 பாராளுமன்ற தொகுதிகளிலும் இம்ரான் கான் போட்டி

January 31, 2023

பாகிஸ்தானில் பாராளுமன்ற இடைத்தேர்தல்: 33 தொகுதிகளிலும் தானே போட்டியிடுவதாக இம்ரான் கான் அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி எம்.பி.க்கள் சிலரும், கூட்டணி கட்சிகள் சிலரும் இம்ரான்கான் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றனர். இதைத் தொடர்ந்து இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. அதன்பிறகு இம்ரான் கான் கட்சியின் எம்.பி.க்கள் கூட்டாக ராஜினாமா செய்தனர். இந்நிலையில் பாகிஸ்தானில் 33 பாராளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற மார்ச் மாதம் 16-ந்தேதி நடைபெறும் என […]

பாகிஸ்தானில் பாராளுமன்ற இடைத்தேர்தல்: 33 தொகுதிகளிலும் தானே போட்டியிடுவதாக இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி எம்.பி.க்கள் சிலரும், கூட்டணி கட்சிகள் சிலரும் இம்ரான்கான் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றனர். இதைத் தொடர்ந்து இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. அதன்பிறகு இம்ரான் கான் கட்சியின் எம்.பி.க்கள் கூட்டாக ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் பாகிஸ்தானில் 33 பாராளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற மார்ச் மாதம் 16-ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. பஞ்சாப் மாகாணத்தில் 12, கைபர் பக்துன்க்காவில் 8, இஸ்லாமாபாத்தில் 3, சிந்து மாகாணத்தில் 9, பலுசிஸ்தானில் 1 என மொத்தம் 33 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி சார்பில் 33 தொகுதிகளிலும் இம்ரான் கான் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த கட்சியின் துணைத் தலைவர் ஷா மஹ்முத் குரேஷி கூறியதாவது:- மார்ச் மாதம் நடைபெற உள்ள இடைத்தேர்தல் தொடர்பாக கட்சியின் மைய குழு கூட்டம் லாகூரில் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்றது. இதில் இடைத்தேர்தல் நடைபெறும் 33 பாராளுமன்ற தொகுதிகளிலும் இம்ரான்கான் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu