2023 இல் உலகளாவிய பொருளாதாரம் பின்னடைவை சந்திக்கும் - உலக வங்கி எச்சரிக்கை

September 17, 2022

விலைவாசி உயர்வைச் சமாளிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இதனால் 2023 இல் உலக நாடுகளின் பொ௫ளாதாரம் கீழ்நோக்கிச் செல்லும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. உலகின் மூன்று பெரிய பொருளாதார நாடுகளான, அமெரிக்கா, சீனா மற்றும் யூரோ ஆகியவை தற்போது பொ௫ளாதார பின்னடைவை எதிர்கொள்வதாக ஒரு ஆய்வு ௯றுகிறது. அதே சமயம் மத்திய வங்கியானது கடந்த 50ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தனது வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதாக ஒ௫ செய்தி அறிக்கை கூறுகிறது. இது […]

விலைவாசி உயர்வைச் சமாளிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இதனால் 2023 இல் உலக நாடுகளின் பொ௫ளாதாரம் கீழ்நோக்கிச் செல்லும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.

உலகின் மூன்று பெரிய பொருளாதார நாடுகளான, அமெரிக்கா, சீனா மற்றும் யூரோ ஆகியவை தற்போது பொ௫ளாதார பின்னடைவை எதிர்கொள்வதாக ஒரு ஆய்வு ௯றுகிறது. அதே சமயம்
மத்திய வங்கியானது கடந்த 50ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தனது வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதாக ஒ௫ செய்தி அறிக்கை கூறுகிறது. இது குறித்து உலகவங்கி தனது அறிக்கையில் ௯றியதாவது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்துவது இன்னும் கடன்களை அதிகரிக்கும். அதாவது உக்ரைனில் நடந்த போர், எரிபொருள் மற்றும் உணவு விலைகளை உயர்த்தியதால் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் மத்திய வங்கியின் வட்டி அதிகரிப்பானது அந்நாட்டின் பொ௫ளாதார வளர்ச்சியை பாதிக்கும் எனக் ௯றியுள்ளது. அடுத்த வாரம் முக்கிய வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் உலக வங்கியானது, வட்டி விகிதம் குறித்த கொள்கை முடிவுகளைத் தெளிவாகத் தெரிவிக்க மத்திய வங்கிக்கு அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் பணவியல் கொள்கை கூட்டங்களுக்கு முன்னதாக உலக வங்கியின் எச்சரிக்கை வந்தது குறிப்பிடத்தக்கது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu