இந்தியன் ரயில்வேயின் வருவாயில் வரலாற்று உச்சம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், 2.4 லட்சம் கோடி அளவில், ரயில்வே துறையின் வருவாய் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் வருவாயை விட 25% உயர்வாகும். மேலும், சரக்கு ரயில்கள் மூலம் கிடைக்கும் வருவாய் 1.6 லட்சம் கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டை விட 15% உயர்வாகும். பயணிகள் ரயில்கள் மூலம் கிடைக்கும் வருவாய் கிட்டத்தட்ட 61% உயர்ந்து, 63300 கோடி அளவில், வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ரயில்வே அமைச்சகம், “மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பென்ஷன் செலவுகளை இந்தியன் ரயில்வே முழுமையாக எட்டி உள்ளது. மேலும், இந்திய ரயில்வேயின் இயக்க விகிதம் 98.1% ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.