மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகின்ற 17ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகின்ற 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான முகூர்த்தக்கால் முத்தாலம்மன் கோவிலில் நடப்பட்டுள்ளது. இதற்காக அலங்காநல்லூர் கீழக்கரையில் 66 ஏக்கரில் 44 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு கலையரங்கம் வருகின்ற 23 அல்லது 24 ஆம் தேதி திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.