மின் விபத்தில் உயிரிழந்தால் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மின்துறை அமைச்சர் கடந்த பிப்ரவரி மாதம் சட்டசபையில் அறிவித்தபடி, மின்விபத்தில் உயிரிழப்பவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை உயர்த்தி வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய ரூ.5 லட்சம் நிவாரண தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தப்படவுள்ளது. மேலும், இரண்டு கை அல்லது கால்கள் அல்லது 2 கண்களை இழப்பவர்களுக்கு ரூ.3 லட்சம், ஒரு கை,கால் அல்லது கண்ணை இழப்பவர்களுக்கு ரூ.1.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
மின்விபத்தில் பாதிக்கப்பட்ட பசுக்கள் மற்றும் எருதுகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.25 ஆயிரம் நிவாரண தொகை மாற்றமின்றி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.