கச்சா எண்ணெய் மீதான லாப வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் கச்சா எண்ணெய் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீதான இந்த வரியை டன்னுக்கு 3300 லிருந்து 4600 ஆக உயர்த்தியுள்ளது. அதேபோன்று டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியானது லிட்டருக்கு 1.50 ரூபாயிலிருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் விமான எரிபொருள் அல்லது ஏடிஎஃப் மீதான வரியும் பூஜ்ஜியமாக நீடிக்கிறது. இந்த புதிய வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த கலால் வரி ஆனது 15 நாட்களுக்கு ஒரு முறை வரி விகிதங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்படுகின்றது .முந்தைய இரண்டு வாரங்களில் சராசரி விலையின் அடிப்படையில் இந்த மதிப்பாய்வு மேற்கொள்ளப்படுகிறது.