குரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரிப்பு - டிஎன்பிஎஸ்சி 

March 22, 2023

குரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரித்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 7,381 இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வுகளை கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தியது. இதுவரை இல்லாத வகையில் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வுக்கான முடிவுகள் இன்னும் வெளியாகாததால் தேர்வர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இம்மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. […]

குரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரித்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 7,381 இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வுகளை கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தியது. இதுவரை இல்லாத வகையில் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வுக்கான முடிவுகள் இன்னும் வெளியாகாததால் தேர்வர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இம்மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில் நடந்து முடிந்த குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு தேர்வு அறிவிக்கப்பட்டபோது 7,381ஆக இருந்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,117ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu