தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

November 14, 2024

பருவமழை காரணமாக, தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது, இதனால் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. சமீபத்தில் காய்ச்சல், சளி, தொண்டை தொற்று போன்ற பாதிப்புகள் காரணமாக ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதைத் தடுக்க, தமிழக அரசு பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது. முக்கியமாக, டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில் தண்ணீர் தேங்குதல் மற்றும் குப்பை கொட்டுதல் போன்றவற்றை தவிர்க்கவும், காய்ச்சல் […]

பருவமழை காரணமாக, தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகின்றன.

தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது, இதனால் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. சமீபத்தில் காய்ச்சல், சளி, தொண்டை தொற்று போன்ற பாதிப்புகள் காரணமாக ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதைத் தடுக்க, தமிழக அரசு பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது. முக்கியமாக, டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில் தண்ணீர் தேங்குதல் மற்றும் குப்பை கொட்டுதல் போன்றவற்றை தவிர்க்கவும், காய்ச்சல் அதிகம் காணப்படும் பகுதிகளில் சிகிச்சை வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது, ஆனால் தற்போது சிகிச்சை பெற்றவர்கள் அனைவரும் சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு மட்டுமே பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu