அஞ்சலக சேமிப்புக்கு வட்டி சதவீதம் உயர்வு.

December 31, 2022

அஞ்சலக சேமிப்புகளுக்கான வட்டியை நாளை முதல் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் அஞ்சலகங்களில் தற்போது தேசிய சேமிப்பு பத்திரத்துக்கு 6.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இது நாளை முதல் 7 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. மூத்த குடிமக்கள் சேமிப்புக்கான வட்டி 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. அஞ்சலக வைப்பு நிதி திட்டத்தில் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான வைப்புத் திட்டத்துக்கான வட்டி 1.1 […]

அஞ்சலக சேமிப்புகளுக்கான வட்டியை நாளை முதல் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் அஞ்சலகங்களில் தற்போது தேசிய சேமிப்பு பத்திரத்துக்கு 6.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இது நாளை முதல் 7 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. மூத்த குடிமக்கள் சேமிப்புக்கான வட்டி 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.

அஞ்சலக வைப்பு நிதி திட்டத்தில் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான வைப்புத் திட்டத்துக்கான வட்டி 1.1 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 6.7 சதவீதமாக உள்ள அஞ்சலக மாதாந்திர வருமான திட்டத்துக்கான வட்டி 7.1 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி உயர்வு 2023 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu