இந்தியா, வங்கதேசத்துடன் 2020 முதல் அமலிலிருந்த TRANS SHIPMENT ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியா, வங்கதேசத்துடன் 2020 முதல் அமலிலிருந்த TRANS SHIPMENT ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், வங்கதேசம் இந்தியா வழியாக மூன்றாம் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வசதி முடிவுக்கு வந்தது. இந்த அறிவிப்பு, மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் ஏப்ரல் 8ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த ஒப்பந்தம், இந்திய ஏற்றுமதியாளர்களிடையே நீண்ட நாட்களாக எதிர்ப்பை ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக ஆடைத் துறையில், சுங்க வசதிகள் குறைபாடாக உள்ளதாக வாதிக்கப்பட்டது. இந்த முடிவு வங்கதேச ஏற்றுமதியை பாதிக்கும் என்றும், போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். வங்கதேச இடைக்கால தலைவர் சீனாவுடன் நெருக்கம் காட்டியதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என கருதப்படுகிறது.