நைஜீரியாவில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தில் 600க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

October 17, 2022

நைஜீரியாவில் சமீபத்தில் ஏற்பட்ட மோசமான வெள்ளப்பெ௫க்கால் 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வெள்ளப் பெருக்கால் 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று நைஜீரியாவின் மனிதாபிமான விவகார அமைச்சகம் அதன் ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து கூறிய  அமைச்சர் சதியா உமர் ஃபாரூக் , கடந்த வாரத்தில் வெள்ளத்தில் பலியானாேர் எண்ணிக்கை 500 ஆக இருந்தது. ஆனால் சில மாநில அரசுகள் வெள்ளப்பெருக்கு முன்னெச்சரிக்கை […]

நைஜீரியாவில் சமீபத்தில் ஏற்பட்ட மோசமான வெள்ளப்பெ௫க்கால் 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வெள்ளப் பெருக்கால் 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று நைஜீரியாவின் மனிதாபிமான விவகார அமைச்சகம் அதன் ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து கூறிய  அமைச்சர் சதியா உமர் ஃபாரூக் , கடந்த வாரத்தில் வெள்ளத்தில் பலியானாேர் எண்ணிக்கை 500 ஆக இருந்தது. ஆனால் சில மாநில அரசுகள் வெள்ளப்பெருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் எண்ணிக்கை 600 ஆக உயர்ந்துள்ளது என்று கூறினார்.

மேலும் மழைக்காலம் வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மழைப்பொழிவு அதிகமாக இருந்தது என்று தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் (NEMA) தெரிவித்துள்ளது. இ௫ப்பினும் சில மாநில அரசுகள் அலட்சியமாக இ௫ந்ததால் இந்த வெள்ளபெ௫க்கானது 82,000 க்கும் மேற்பட்ட வீடுகளையும் , சுமார் 110,000 ஹெக்டேர் விவசாய நிலங்களையும் முற்றிலுமாக அழித்தது என உமர் ஃபாரூக் கூறினார். 2012 இல் ஏற்பட்ட வெள்ளத்தில் 363 பேர் இறந்தனர் மற்றும் 2.1 மில்லியனுக்கும் அதிகமானோர் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் துணை-சஹாரா ஆப்பிரிக்காவின் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யா-உக்ரைன் போரினால் பல பொருளாதார நெ௫க்கடிகளை சமாளிக்கிறது என்றும் கூறினார். இதற்கிடையில் உள்ளூர் அரிசி உற்பத்தியை அதிகரிக்க, அரிசி இறக்குமதியை தடைசெய்துள்ளது நைஜீரிய அரசு. இந்நிலையில் இந்த வெள்ளப்பெ௫க்கானது அரிசியின் உற்பத்திவிலையை பாதிக்கும் என்று அரிசி உற்பத்தியாளர்கள் எச்சரித்துள்ளனர். மறுபுறம் உலக உணவுத் திட்டம் மற்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆகியவை உணவுப்பற்றாக்குறை அபாயத்தை எதிர்கொள்ளும் ஆறு நாடுகளில் நைஜீரியாவும் ஒன்றாக இருப்பதாகக் கூறியது கவனிக்கத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu