இந்தியா நோக்கி வந்த எண்ணெய் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உள்ளனர். இவர்கள் செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களை குறி வைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் கடந்து சில மாதங்களாக வணிக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செங்கடலில் ஆண்ட்ரோமிடா ஸ்டார் என்ற எண்ணெய் கப்பல் ரஷ்யாவில் இருந்து இந்தியாவை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தது. இந்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 3 ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த கப்பல் இங்கிலாந்து நாட்டிற்கு சொந்தமானது என்ற போதிலும் பணமா கொடியுடன் பயணம் செய்து கொண்டிருந்தது. இந்த டேங்கர் கப்பல் ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. ரஷ்யாவில் உள்ள பிரமோர்ஸ்கிள் என்ற இடத்திலிருந்து இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள வாடினருக்கு பயணம் செய்து கொண்டிருந்தது. இவ்வாறு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதால் வணிக கப்பல்கள் ஆப்பிரிக்காவை சுற்றி பயணம் செய்கின்றன. இதனால் செலவு அதிகரித்து சர்வதேச வணிக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.