கடந்த 2023 ஆம் நிதியாண்டில், இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 30% உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, இந்தியா, 162.46 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளது. குறிப்பாக, கோகிங் கோல் இறக்குமதி 5.44% உயர்ந்துள்ளது. அதன்படி, 2022 ஆம் நிதியாண்டில், 51.65 மில்லியன் டன் அளவில் இருந்த கோகிங் கோல் இறக்குமதி, 2023 ஆம் ஆண்டு 546 மில்லியன் டன் ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா, கடந்த மார்ச் மாதத்தில் மட்டுமே, கோகிங் செய்யப்படாத நிலக்கரியை 13.88 மில்லியன் டன் அளவில் இறக்குமதி செய்துள்ளது. மேலும், கோகிங் கோல் இறக்குமதி 3.96 மில்லியன் டன் அளவில் பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட சற்று குறைவாகும்.