அமெரிக்கா போன்ற நாடுகளில் ஓமிக்ரோன் எக்ஸ் பி பி 1.5 வகை கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் முதன் முதலாக இந்த வேரியன்ட் தொற்று பதிவாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் இந்தியாவின் முதல் எக்ஸ் பி பி 1.5 கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இந்த வகை கொரோனா தொற்று அமெரிக்காவில் 3.6% பரவி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் இந்த வகை கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இது வேகமாக பரவும் தன்மை உடையது எனவும், அதிக பாதிப்பை விளைவிக்கக் கூடியது எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் இந்த தொற்று பதிவாகியுள்ளதால், மகாராஷ்டிரா மாநிலத்தின் கண்காணிப்பு அதிகாரி டாக்டர் பிரதீப் அவதே, “இந்த வைரஸ் குறித்த மரபணு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொற்றை மாநிலத்திலிருந்து விலக்கி வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், பரவலாக வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது” என்று கூறினார்.