கனடாவில் வாழும் மக்களுக்கு விசா வழங்க இந்திய அரசு இடைக்கால தடை விதித்துள்ளது.
கனடாவில் பல சீக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு இந்தியா தான் காரணம் என்று கன்னடம் குற்றம் சாட்டி வந்தது. மேலும் இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி கனடாவில் உயர் தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் கனடாவில் மக்களுக்கு விசா வழங்க இந்தியா இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் இந்தியா மற்றும் கனடாவிற்கு இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளவும் முழு தன்மையை வெளிப்படுத்தவும் எங்களுடன் இணைந்து பணியாற்றுங்கள் என இந்திய அரசை கனடா பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். இது தவிர இந்தியா வளர்ந்து வரும் நாடு. நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் பிரச்சனைகளை உருவாக்கவோ அல்லது அதிகப்படுத்தவோ நினைக்கவில்லை. சில உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காக எங்களுடன் இணைந்து இந்திய அரசு பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.