2040ல் இந்தியாவின் விமானப் போக்குவரத்து 7% உயரும் என்று போயிங் நிறுவனம் கணித்துள்ளது.
மும்பையில் நடைபெற்ற சிஐஐ அமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய போயிங் இந்தியா தலைவர் சலீல் குப்டே, அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் விமானப் போக்குவரத்து வளர்ச்சிக்கு ஈடுசெய்ய 31,000 விமானிகளும் 26,000 மெக்கானிக்குகளும் தேவைப்படுவார்கள் என்று தெரிவித்தார்.போயிங், ஏர் பஸ் நிறுவனங்களிடம் இருந்து டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் கடந்த மாதம் 470 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்நிலையில், விமான நிலையங்கள் மற்றும் அது சார்ந்த கட்டுமானங்களை உருவாக்குவது அவசியம் என்று தெரிவித்தார். 2040ல் இந்தியாவில் விமான போக்குவரத்து 7% உயரும் என்று போயிங் கணித்து இருப்பதை சுட்டிக் காட்டிய அவர், பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றுவரக்கூடிய இந்தியா, விமானப் போக்குவரத்துத் துறையில் பெரிய வளர்ச்சியை எட்ட இருப்பதாக கூறினார்.