தேசிய தேர்வு முகமை திருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், கருணை மதிப்பெண் உள்ளிட்ட பல குளறுபடிகள் ஏற்பட்டது. இதில் சமீபத்தில் உச்சநீதிமன்றம் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படும் ஆணையை வழங்கியதை அடுத்து புதிய மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் இளநிலை நீட் தேர்வு முறைகேடு வழக்கு நடைபெற்று வரும் நிலையில் தேசிய தேர்வு முகமை திருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதல் நூறு இடங்களில் 10 தமிழக மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர்.