உலகில் அதிக அளவில் நடைபெறும் சைபர் கிரைம்கள் குறித்து நடத்திய ஆய்வு ஒன்றில் இந்தியா பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.
சர்வதேச குழு ஒன்று உலக அளவில் இணையதள குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.அதில் ரான்சம்வேர், கிரெடிட் கார்ட் திருட்டு மற்றும் மோசடி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆய்வில் ரஷ்யா முதலிடம் பிடித்துள்ளது. அதில் உக்ரைன், சீனா, அமெரிக்கா, நைஜீரியா, ருமேனியா ஆகியவை முறையே இரண்டு முதல் ஆறாவது இடங்களை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து வடகொரியா, இங்கிலாந்து, பிரேசில் மற்றும் இந்தியா ஏழு முதல் பத்தாவது இடங்களை பிடித்துள்ளது. மேலும் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் தொழில்நுட்ப சைபர் கிரைமில் குறைந்த அளவே ஈடுபட்டுள்ளனர். ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகியவை மிகப்பெரிய அளவில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.