லிபியா தலைநகர் திரிபோலியில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய தூதரகம் திறக்கப்பட்டுள்ளது.
லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் போராட்டம், ராணுவ தாக்குதல் என பல்வேறு பிரச்சனைகள் நிலவில் வந்ததால் அங்கிருந்து 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பத்திரமாக இந்தியாவுக்கு மீட்கப்பட்டனர். இதன் பிறகு பாதுகாப்பு பிரச்சனை காரணமாக லிபியாவில் இருந்த இந்திய தூதரகத்தை 2019 ஆம் ஆண்டு இந்திய அரசு மூடியது. இந்நிலையில் லிபியா தலைநகர் திரிபோலியில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. லிபியா குடிமக்களுக்கு விசா வழங்குதல் மற்றும் இந்திய வெளிநாட்டினருக்கான வேலை நிலைகளை சரி பார்த்தல் போன்றவை இந்த தூதரகத்தில் இனி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.