கனடா நாட்டு குடிமக்களுக்கு, இந்தியா மீண்டும் இ-விசா சேவையை தொடங்கியுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, இந்தியா கனடா இடையே பிளவு ஏற்பட்டது. இதன் காரணமாக, 2 மாதங்களுக்கு முன் கனடா நாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும் விசா சேவைகளை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது. தொடர்ந்து, இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் கனடாவுடன் உறவை மீட்டு வரும் இந்தியா, கடந்த மாத இறுதியில் குறிப்பிட்ட விசா சேவைகளை மீண்டும் ஏற்படுத்தியது. தற்போது, இ-விசா சேவையை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.