மத்திய நிதி அமைச்சகம், அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவின் கடன் சுமை 150 லட்சம் கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2023 ஆம் நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், இந்தியாவின் கடன் சுமை 150.95 லட்சம் கோடியாக சொல்லப்பட்டுள்ளது. இதுவே, கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், 147.19 லட்சம் கோடியாக பதிவாகி இருந்தது. எனவே, காலாண்டு அடிப்படையில் 2.6% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “கடன் வாங்கியதற்காக மத்திய அரசு வழங்கியுள்ள கடன் பத்திரங்களில், 28.29% பத்திரங்களுக்கு 5 ஆண்டுகளுக்கும் குறைவான அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகால கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் 7.33% ஆக குறைக்கப்பட்டுள்ளது” - இவ்வாறு கூறப்பட்டுள்ளது.