பாலஸ்தீனத்திற்கு இந்தியாவிலிருந்து 30 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

October 23, 2024

இந்தியாவிலிருந்து 30 டன் நிவாரணப் பொருள்கள் பாலஸ்தீனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களால், அங்குள்ள மக்கள் உணவு, குடிநீர் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், ஐ.நா.வின் நிவாரணப் பணிகள் மூலம் இந்தியா மனிதாபிமான உதவியாக நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகிறது. நேற்று அனுப்பப்பட்ட 30 டன் நிவாரணப் பொருட்களில் அத்தியாவசிய மருந்துகள், அறுவைச் சிகிச்சைக்கான மருந்துகள், பல் மருத்துவ உபகரணங்கள், பொது மருத்துவ சிகிச்சைக்கு […]

இந்தியாவிலிருந்து 30 டன் நிவாரணப் பொருள்கள் பாலஸ்தீனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களால், அங்குள்ள மக்கள் உணவு, குடிநீர் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், ஐ.நா.வின் நிவாரணப் பணிகள் மூலம் இந்தியா மனிதாபிமான உதவியாக நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகிறது. நேற்று அனுப்பப்பட்ட 30 டன் நிவாரணப் பொருட்களில் அத்தியாவசிய மருந்துகள், அறுவைச் சிகிச்சைக்கான மருந்துகள், பல் மருத்துவ உபகரணங்கள், பொது மருத்துவ சிகிச்சைக்கு தேவையான பொருட்கள் மற்றும் கலோரி அதிகமான பிஸ்கட்டுகள் அடங்கும். இந்த தகவலை வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu